jeevan jeevan Author
Title: ராஜாவை கைகழுவும் கலைஞா்… பேட்டி இதோ!
Author: jeevan
Rating 5 of 5 Des:
 கலைஞா்  அளித்த பேட்டி : *   ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் ஜாமின் மனு டில்லி கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே ; அதுபற்றி...



  •  கலைஞா் அளித்த பேட்டி:
    • * ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் ஜாமின் மனு டில்லி கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே; அதுபற்றி?

      அது கோர்ட் விவகாரம்; நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

      * காங்கிரஸ் உடன் உங்கள் உறவு தற்போது எப்படி இருக்கிறது?

      எல்லாருடனும் நல்ல உறவு இருக்கிறது.

      * இந்தத் தீர்ப்பால் காங்கிரசுடன் உங்களுக்கு உள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்? இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?

      தி.மு.., ஒரு ஜனநாயக இயக்கம்; நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியில் செயற்குழு, பொதுக்குழு கூடி தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.

      * செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப் போகிறீர்கள்?

      தேவைப்படும் போது கூட்டுவோம்.

      * உங்கள் மகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே; உங்கள் மனநிலை எப்படி உள்ளது?

      உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ, அந்த மனநிலையில் என் மனம் உள்ளது.

      * இந்த தீர்ப்பு குறித்து டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போகிறீர்களா?

      சட்ட வல்லுனர்களை ஆலோசித்து முடிவெடுப்பேன்; பொறுத்திருந்து பாருங்கள்.

      * உடனே டில்லி போகிறீர்களா?

      இப்போது நான் போகவில்லை.

      * தேர்தலில் உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

      மக்கள் நல்ல ஓய்வு கொடுத்துள்ளனர். இவ்வாறு கருணாநிதி பதிலளித்துள்ளார்.

      குறிப்பு : அப்படியெனில் குற்றம் செய்தது…  ராம்ஜெத்மலானியின் கருத்தை இவா் வழிமொழிகிறாரா?,இல்லை… இவா் கருத்தை ராம்ஜெத்மலானி வழிமொழிந்தாரா?
      எப்படியாயினும் ராசாவின் நிலை படுபரிதாபம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top