வெள்ளி, 1 ஜூன், 2012

உணவுப் பாதுகாப்பை உருக்குலைக்கும் சதி

        கடும் விலைவாசி உயர்வால் தாக்கப்பட் டுள்ள மக்களுக்கு ஓரளவுக்கேனும் பாதுகாப் பாக இருப்பது பொதுவிநியோக முறைதான். தமிழகத்தில் பொது விநியோக முறை மூலம் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படுவது, பல்வேறு மாநிலங்களில் மானிய விலை யில் வழங்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கை கள் காரணமாக பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைகிறார்கள். அப்படியெல்லாம் ஆறுதலாக இருக்க விடமாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டது போல் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுகிறது. 

          உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் உண்மையில் அடித்தட்டு மக்களுக்கு பாதுகாப் பற்ற ஒரு நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. உலக வங்கி போன்றவற்றின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து, பொது விநியோக முறையை முடி ந்த அளவிற்கு சீர்குலைக்கும் திருப்பணியில் அரசு இறங்கியிருக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே உண வுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற ஒரு கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வறு மைக் கோட்டுக்கு மேலே உள்ள அனைத்து வகையான குடும்பங்களையும் இந்த உணவுப் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே தள்ளி விடுவது என்றும் அரசு திட்டமிட்டு வருவதாக அந்தச் செய்தி கூறுகிறது.நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவில் இது ஒரு முக்கியமான மாற்றமாக முன்வைக்கப்பட்டிருக் கிறது. நிலைக்குழு என்ன முடிவுக்கு வரப்போ கிறது என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

         இவ்வாறு பொதுவிநியோக முறையில் பலன் பெறும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை யை சுருக்குவதற்கு பல மாநில அரசுகள் எதிர் ப்பு தெரிவித்துள்ளன. பொது விநியோக முறை யாக ஒரே சீரானதாக நாடு முழுவதும் செயல்படு த்த வேண்டும் என்று வலுவான முறையில் வலி யுறுத்தப்பட்டு வருகிறது. அதை சிறிதும் பொருட் படுத்தாமல், ஏற்கெனவே இருக்கிற பாது காப்பு வளையத்தின் சுற்றளவைச் சுருக்குவது என் பதில்தான் மத்திய அரசு பிடிவாதம் காட்டு கிறது.

          இது நடைமுறையில் மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஒன்று, பெ ரும்பகுதி மக்களுக்கு பொது விநியோக முறை யின் பலன் கிடைக்காது என அறிவிக்க வேண் டியிருக்கும். அல்லது, மத்திய தொகுப்பிலிருந்து இனி குறைந்த அளவிலேயே அரிசியும் கோது மையும் கிடைக்கும் என்பதால், அதிக விலை யில் வெளிச் சந்தையிலிருந்து கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்க வேண்டிய சுமையை மாநில அரசுகள் ஏற்க வேண்டியிருக் கும். காலப்போக்கில் இத்தகைய ஏற்பாடு என் பது, பொது விநியோக முறையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதில்தான் போய் முடியும் என்ப தை விளக்க வேண்டியதில்லை.



            வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உரிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வோ, செயல்படுத்தவோ அரசும், திட்டக்குழுவும் தயாராக இல்லை. மாறாக, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையை செயற்கையான முறையில் குறைத்துக்காட்டி, மத்திய அரசின் நிதிப் பொறுப்பை வெட்டிச் சுருக்குவதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. வறுமைக்கோடு அளவு என்பதே ஒரு போலியான ஏற்பாடாக வந் துள்ள நிலையில், ஏழைகளில் பெரும்பகுதியினர் விலைவாசியின் கொடூரத் தாக்குதலில் சிக்க வைக்கப்படுகிறார்கள். இதற்கு எதிரான ஆவே சப் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் வெடிப்பதுதான் மத்திய அரசின் வஞ்சகப் போக் கைத் தடுத்து நிறுத்த முடியும்.


THANKS : THEEKKATHIR


வியாழன், 8 டிசம்பர், 2011

பஸ் ஏற முடியாவிட்டால் என்ன? காரில் போகலாமே...


        ‘நா ஒரு டிக்கெட் தான கேட்டேன். ஏன் ரெண்டு டிக்கெட் தர்றீங்கஎன்று பஸ் கண்டக்டரி டம் ஒரு பயணி கேட்டுக்கொண்டிருந்தார். ‘நா ஒரு டிக்கெட் தாங்க கொடுத்திருக்கேன்என்றார் கண் டக்டர். ரெண்டு டிக்கெட் இருக்கே என்றார் பயணி மீண்டும். நல்லா பிரிச்சுப் பாருங்க ரெண்டு, மூன்று ரூபா டிக்கெட், ஒரு டிக்கெட்டுக்காகத்தான் கொடுத்திருக்கேன் என்றார் கண்டக்டர்.
மதுரையில் அண்மைக்காலமாக இதுபோன்ற வாக்குவாதங்கள் பஸ்ஸில் பயணம் செய்பவர் களின் காதுகளில் விழுந்துகொண்டுதான் இருக் கின்றன. காரணம் என்ன?

             முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நள்ளிரவில் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டது நாட்டில். அதுபோல கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அதிரடியாக அமல்படுத்தப்பட்டது தமிழ்நாட்டில்.

              ஏற்கெனவே மதுரையில் தமிழகத்தின் பிற பகுதிகளைவிட கூடுதலாக பஸ் கட்டணம் வசூ லிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலாவதி யாகிப்போன - காயலான் கடைக்குப் போகவேண் டிய பல பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழக மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிதாக இறக்கப்பட்ட பேருந்துகளுக்கு சிட்டி எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ், தாழ்தள பேருந்து என புதிய புதிய பெயர்களை எழுதி கட்டணங்களை அதிகமாக வசூலித்தது மதுரை கோட்ட நிர்வாகம். அதற்கும் முன்னதாக குறைந்த கட்டணமாக ரூ.2 வசூலிக்கப்பட்டபோது எல்எஸ் எஸ் என்று புதிய கலர் பெயிண்ட் அடித்த பஸ்ஸுக்கு ரூ.2.50 வசூலித்தது வேறு கதை. ஆனால் சாதாரண கட்டணம், எல்எஸ்எஸ் கட்டணம் என எல்லா பேருந்துகளும் ஒரேமாதிரிதான் நிறுத்தங் களில் நின்று சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

               இதற்கும் கூட முன்னோடியாக முந்தைய அதி முக ஆட்சியில்ஜெசர்வீஸ் என்ற பெயரில் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது. இந்நிலையில்தான் சிட்டி எக்ஸ் பிரஸ், சொகுசு, தாழ்தளம் எல்லாம் கிளம்பின, சாதா ரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தலை யில் சுமைகளைத் திணிக்க. சாதாரண 2 ரூபாய் கட்டணம் சிட்டி எக்ஸ்பிர ஸில் 3 ரூபாய் ஆனது. சொகுசு, தாழ்தளத்தில் 5 ரூபாய் ஆனது. அப்படியே கடைசிவரை டிக்கெட் ஏறுமுகமானது. டவுன் பஸ் களில் அதிகபட்சமாக இருந்த ரூ.9 - ரூ.15 ஆனது. மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பி போராடியபோது கட் டணத்தை உயர்த்தவில்லை என்று அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் கூறினர். 

                முந்தைய அரசு சீரழித்த பொதுத்துறையை காப்பாற்றப் போகிறோம் என்று கூறி, சாதாரண அப்பாவி மக்களின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டது இன்றைய அதிமுக ஆட்சி.

                    ஒரு நோயாளி கிராமத்திலிருந்து மதுரைக்கு- பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வதென்றால் 20 ரூபாய் இருந்தால் போதும். ஆனால் இப்போது அவர் 50 ரூபாய் இல்லாமல் பஸ் ஏறமுடியாது. ஏறி னால் மீண்டும் ஊர்போய்ச் சேரமுடியாது.

                     ஒரு கட்டுமானத் தொழிலாளி வேலைக்காக பஸ் ஏறினால் குறைந்தது நூறு ரூபாயாவது கொண்டுவரவேண்டும். அவர் வேலைக்குச் செல் வதற்காக மேஸ்திரியோ - காண்டிராக்டரோ - பிரித்துவிடும் இடத்துக்கு அல்லது பட்டறைக்குச் செல்லவேண்டும். பின்பு வேலைத் தளத்துக்குச் செல்ல வேண்டும். பிறகு மாலையில் வேலை முடிந்ததும் முன்போலவே இரண்டு பஸ்கள் ஏற வேண்டியிருக்கும். சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவழிக்கவேண்டிய கட்டாயத்தில் - நிர்ப் பந்தத்தில் நிறுத்தப்பட்டுவிட்டனர்.

                       இந்த நிலையில்தான் ஒவ்வொரு பயணியி டமும் ரெண்டு டிக்கெட் கொடுக்கும் நிலை கண்டக்டருக்கு ஏற்படுகிறது. பழைய கட்டண டிக்கெட்டுகளை கீழே போட முடியாது என்று போக்குவரத்து நிர்வாகம் பயணிகளுக்கு ரெண்டு ரெண்டு டிக்கெட்டாகக் கொடுத்து தீர்க்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால்தான் மக் களும் கண்டக்டர்களும் இப்படிப் பேசிக் கொள் கிறார்கள்.

                முன்பு மதுரை பெரியார் பேருந்து நிலையத் திலிருந்து அரசரடி செல்வ தென்றால் 5 ரூபாய் (மகபூப்பாளையத்துக்கு 3 ரூபாய்) சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்சில். இப்போது அரசரடிக்கு 7 ரூபாய் (மக பூப்பாளையத்துக்கு 5 ரூபாய்) சில காலத்துக்கு முன்பு அரசரடி ஒரு ஸ்டேஜ், அடுத்து பாத்திமா கல்லூரி அல்லது ஆலமரம் ஒரு ஸ்டேஜ் என்று இருந்தது. முந்தைய ஆட்சிக்காலத்தில் போக்கு வரத்து நிர்வாகம் அதை மாற்றித்தான் மக்கள் தலையில் சுமையை ஏற்றியது. அது இப் போதைய ஆட்சியாளர்களுக்கு மிக வசதியாகிப் போய் விட்டது.

                      நகரத்துக்குள்ளேயே போய் வருபவர்களுக்கு குறைந்த கட்டணம் 3 ரூபாய், முதல் ஸ்டேஜ், 2வது ஸ்டேஜ் இரண்டுக்கும் பொருந்தும். அதற்கடுத்த கட்டணம் 5 ரூபாய், 3வது, 4வது, 5வது ஸ்டேஜ் வரை செல்லும். இப்போதோ முதல் ஸ்டேஜ் உடன் குறைந்தபட்ச ஆரம்பக் கட்டணம் 5 ரூபாய் முடிந்துவிடுகிறது. 2வது, 3வது, 4வது வரை இரண் டாவது ஸ்டேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படியாக முன்பு வெளியூர் பஸ்களில் சென்று வந் தால்தான் இருபது ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். இப்போதோ டவுன் பஸ்ஸி லேயே அத்தகைய டிக்கெட்டுகளை மக்கள் வாங் கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது, ஏற்படுத்திவிட்டது இன்றைய ஆளும் கட்சி. இப்போது திருமங்கலம், வாடிப்பட்டி, சோழ வந்தான், அலங்காநல்லூர், மேலூர், திருப்புவனம், காரியாபட்டி செல்வது கூட வெளியூர் பயணம் போவதுபோல் ஆகிவிட்டது.

                                2
ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் என குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்பவர்கள் கம்பெனியோ, கடையோ பஸ்சுக்கு 10 ரூபாய் கொடுப்பதைப் பயன்படுத்துவார்கள். இப்போது கடையோ, கம்பெனியோ எவ்வளவு கொடுக்கும்; மீதிப் பணத்துக்கு என்ன செய்வார்கள்? 

                     மதுரையில் ஒரு வங்கியில் தற்காலிக பணி யாளராக வேலை செய்தவர் தற்போது திருச்சுழியில் உள்ள கிளைக்குச் சென்று வருகிறார். அவரது சொந்த ஊரான அலங்காநல்லூரிலிருந்து பெரியார் பஸ் நிலையம் - அங்கிருந்து காரியாபட்டி - பிறகு திருச்சுழி என்று வேலைக்குச் சென்றால் இப்போது அவர் பேருந்துக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.140 செலவழிக்கவேண்டும். அவரது தினக்கூலி சம் பளமே ரூ.150 தான். இப்போது அவர் முன் உள்ள கேள்வி, வேலைக்குச் செல்வதா? வேலையை விட்டு விடுவதா? அல்லது திருச்சுழியிலேயே தங்க முடியுமா? தங்கினால் செலவு என்னாகும்? எப்படிச் சமாளிப்பது? மூன்றாண்டு காலமாகிறது. இன்னும் ஓரிரு வருடத்திலாவது பணி நிரந்தரமா கலாம். வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ள நிலையில் தற்போது இருக்கிற வேலையை விட்டுவிட முடியுமா?

                       சாதாரண ஏழை, எளிய மக் கள் ரயில் ஏறுவது, விமானம் ஏறுவது போன்ற வற்றை முன்பு லட்சியக் கனவாக நினைப்பார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் பஸ் ஏறுவதுகூட வாழ்க்கையின் லட்சியக் கனவாக ஆனாலும் ஆக லாம். பஸ் ஏறமுடியாத நிலையில் மக்கள் இருக் கிறார்கள் என்று யாராவது அம்மாவிடம் கூறினால் (அப்படி கூற ஆள் இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டாம்). அப்படியா, காரில் ஏறிப்போக வேண் டியது தானே என்று அவர் கூறினாலும் கூறலாம்.
                                                                                                                                                     -ப.முருகன்
                                                                                   thanks : theekkathir

Related Posts Plugin for WordPress, Blogger...